நாஞ்சில் சம்பத் நடிப்பதற்கு பேச சென்ற ஆர்.ஜே.பாலாஜி..! நாஞ்சில் சம்பத் கூறிய ஒரு வார்த்தையை கேட்டு கண் கலங்கியது.!! மனம் திறந்த ஆர்.ஜே.!!
RJ balaji speech about LKG movie
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பேச்சாளர் மற்றும் இலக்கியவாதியாக திகள்பவர் நாஞ்சில் சம்பத். மறைந்த முதல்வர் ஜெயலலதாவின் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா - தினகரன் கூட்டணியை ஆதரித்து., தற்போது அரசியலில் இருந்து வெளியேறினார். அரசியலில் இருந்து வெளியேறிய இவர் திரைத்துறையில் பயணிக்க தொடங்கிவிட்டார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி - நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் பிப்.22 ம் தேதியன்று வெளிவர இருக்கும் திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படமானது முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி., அதனை கிண்டல் செய்யும் வங்கியிலும்., யோசிக்க வைக்கும் வகையிலும் உருவாகியுள்ள திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது., மதிப்பிற்குரிய மற்றும் நன்றிக்குரிய மனிதர்., நாஞ்சில் சம்பத் சார். அரசியல் மையமான திரைக்கதை என்பதால்., இவர் திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன்.
அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருவதாக தெரிவித்து., இல்லத்திற்கு சென்றேன். வீட்டிற்கு சென்றவுடன் எனக்கு அதிர்ச்சி., செய்திகளில் படித்த போது., கட்சியில் இணைத்தார்., இன்னோவா கார் வாங்கியுள்ளார் என்று இருந்தது., அவையெல்லாம் வீட்டில் இருக்கும் என்று நினைத்தேன்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுவசதி குடியிருப்பில் சுமார் 600 சதுர அடி இல்லத்தில் இருந்தார். அவரது இல்லத்தை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியானது. அவரிடம் கதையா சொல்லி எனது தந்தையாக நடிக்க வேண்டும் என்று கூறினேன்.
ஒரு கணம் யோசனை செய்த அவர் திரைப்படத்தில் நடிக்கிறேன்., எனது மகனின் கல்லூரி படிப்பிற்கு பணம் வழங்குவாயா? என்று தெரிவித்தார். இதனை கேட்டு ஒரு கணம் அதிர்ந்தே போனேன்., 40 வருடமாக அரசியலில் இருக்கும் பலர் தங்களின் மகன் பெயரில் கல்லூரிகளை கட்டி இருக்கும் வேலையில்., மகனின் படிப்பிற்கு பணம் கெட்ட சொன்னதை கேட்டு வருத்தமடைந்தேன்.
English Summary
RJ balaji speech about LKG movie