சூப்பர் சிங்கர் பிரியங்கா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்றவர் பிரியங்கா. 

சென்னையில் உள்ள செட்டிநாடு பல் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வரும் பிரியங்காவிற்கு பெரிய பின்னணி பாடகியாக வேண்டும் என்பது தான் கனவு.

இவர் பல பக்தி ஆல்பங்களில் பாடியுள்ளார். அதன் பிறகு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். 

இயக்குனர் பாலாவின் உதவியால் சினிமா பாடகியாகவும் ஆனார். அவன் இவன் படத்தில் ஒரு மலையோரம் என்ற பாடலை விஜய் யேசுதாசுடன் இணைந்து பாடினார். 

இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பிரியங்காவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.

மேலும் தற்போது, இளையாராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாசுடன் பாடியிருக்கிறார். 

நாச்சியார் படத்தில் இடம்பெறும் ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இவர் தற்போது பின்னணி பாடகியாக வளர்ந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Now Priyanka is growing as a background singer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->