நான் உண்மைய பேச ஆரம்பிச்சா அவ்ளோதான்! ஆவேசமான புருவசிமிட்டல் அழகி பிரியா வாரியார் ! - Seithipunal
Seithipunal


ஓமர் லுலு இயக்கத்தில் ரோ‌ஷன், பிரியா வாரியர், நூரின் ஷெரீஃப் உள்ளிட்ட பலதரும் நடித்து வெளிவந்த படம்  ‘ஒரு அடார் லவ்’. இப்படம் காதலர் தினத்தன்று மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

மேலும் இந்த படத்திலிருந்து வெளியான மாணிக்ய மலரே என்ற பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் மூலம் பெருமளவில் புகழ் பெற்றார். இந்ந்திலையில் இதனாலேயே இப்படம் பெருமளவில் வரவேற்பை பெரும் என எதிர்பார்த்த நிலையில் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குநர் ஓமர் லுலு பேட்டி ஒன்றில் கூறியதாவது, மாணிக்ய மலரே பாடல் பெருமளவில்  ஹிட் ஆனவுடன் தயாரிப்பாளர் பிரியா வாரியரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படத்தை எடுக்க சொன்னார். அதனால் படத்தின் கதையே முழுவதும் மாறிப்போனது, பிரியா வாரியரைவிட  நூரின் ஷெரீஃப் தான் திறமையான நடிகை என கூறினார்.

மேலும் இதுகுறித்து நூரின் ஷெரீஃப் கூறுகையில் இந்த படத்தில் கண்டான் நடிகையாக நடிக்கவிருந்தேன். ஆனால் பிரியா வாரியரின் புருவ சிமிட்டல் வைரலானதும் கதை முழுவதும் மாற்றப்பட்டு நான் துணை நடிகையாக மாறினேன்.  என வருத்தமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த குற்றசாட்டு குறித்து பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ’நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும்.நான்  ஏன் அவர்களைப் போலவே இருக்க வேண்டும்? என்ன ஆனாலும் கர்மா பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லைஎன பதிவிட்டு அதனை உடனே நீக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priya warriar angry on adar movie director


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->