சிக்கலில் சிக்கிய ராதா ரவி... நடிகர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் "கொலையுதிர் காலம்" படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பழம்பெரும் நடிகர் ராதா ரவி, நயன்தாரா குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாகி தற்போது சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து அவரை திமுக தற்காலிகமாக நீக்கம் செய்தது. ஆனால், ராதாரவி 'நான் முழுமையாக கட்சியை விட்டு விலகிக் கொள்கிறேன்' என விலகிவிட்டார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் ராதா ரவிக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரையுலகில் 50 வருட நீண்ட அனுபவமுடைய ராதா ரவி, அதனை நல்வழியில் பயன்படுத்தினால் வரும் தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nadigar sangam condemned for radharavi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->