டிக்டாக்கினால் வந்த வினை! இளம்பெண்ணின் செயலால் துடிதுடிப்போன தாயார்! திணறிபோன போலீசார்.!
girl escape from home for tiktak lover
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் வசித்துவந்த சிவில் இன்ஜினியரிங் படித்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது செல்போனில் டிக் டாக் வீடியோv எடுத்து அதனை முகநூல் பக்கத்தில் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவரது வீடியோவை திருநெல்வேலி, வாசுதேவநல்லூரை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். மேலும் அவருடன் பேஸ்புக், டிக்டாக்கில் பேசி பழகி வந்துள்ளார். முதலில் நட்பாக பழகிய அவர்கள் சிறிது காலத்தில் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மாணவி வீட்டில் இருந்து வெளியேறி தர்மபுரியில் உள்ள அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளார். பெண் மாயமானதை தொடர்ந்து, துடிதுடித்துப்போன பெண்ணின் தாயார் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அந்தப் பெண் தர்மபுரி இளைஞரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தர்மபுரி மாவட்ட காவல் நிலையத்தில் தகவல் அளித்த நிலையில் அவர்கள் அந்தப் பெண்ணையும் இரு குடும்பத்தாரையும் அழைத்து சமாதானம் பேசினர்.ஆனால் அந்த வாலிபர் திடீரென தலைமறைவாகி விட்டார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் கூறியதை கேட்காமல் இளம்பெண் பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் அந்த இளைஞனின் குடும்பத்தாரிடம் இவர் இன்னும் திருமண வயதை அடையவில்லை. அவரை பெற்றோருடன் அனுப்பி வையுங்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த அறிவுரை மற்றும் போலீசாரின் அறிவுரையைக் கேட்டு அந்தப் பெண் வெகு நேரத்திற்கு பிறகு தனது குடும்பத்தாருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். இதனால் காவல் நிலையத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
English Summary
girl escape from home for tiktak lover