பிரபல நடிகையிடம் இருந்து கோடிக்கணக்கில் நிலம் அபகரிப்பு! காவல் ஆணையரிடம் நடிகை புகார்! - Seithipunal
Seithipunal


சென்னை, காவல் ஆணையரிடம் நடிகை கவுதமி நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். அதில் தெரிவித்திருப்பதாவது, ''125க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிபடங்களில் நடித்துள்ளேன். 

எனது மகளுக்கு 4 வயதாக இருக்கும்போது கடந்த 2004 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமாவில் 17 வயது முதல் நடிப்பு சேமித்த பணத்தின் மூலம் 46 ஏக்கர் நிலம் ஸ்ரீபெரும்புதூரில் வாங்கினேன். 

தற்போது அந்த இடத்தின் மதிப்பு ரூ. 25 கோடியாகும். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக விற்பனை செய்ய முடிவு செய்தேன். 

அதே சமயத்தில் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவரிடம் இது குறித்து தொடபு கொண்டு நிலத்தை விற்று தருவதாக தெரிவித்தார். 

நான் அவரை முழுமையாக நம்பி எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை அவரிடம் வழங்கினேன். அவர் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். 

பின்னர் இந்த பத்திரங்களை எல்லாம் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்தார். ஆனால் எனது கையெழுத்தை மோசடியாக போட்டும் போலியாவணங்களை தயாரித்தும் அழகப்பனும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து கொண்டனர்.  

இது குறித்து அவரிடம் கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே எனக்கு சொந்தமான இடத்தை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து மீட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Expropriation crores land from famous actress


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->