பெரிய குண்டை தூக்கி போட்ட ஸ்ரீரெட்டி.! வெளிநாடுகளில் சென்று படம் எடுப்பது எதற்கு தெரியுமா.!!
பெரிய குண்டை தூக்கி போட்ட ஸ்ரீரெட்டி.! வெளிநாடுகளில் சென்று படம் எடுப்பது எதற்கு தெரியுமா.!!
தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.
முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். பிரபல நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி ஆகியோரும் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினர்.
இதையடுத்து, முன்னணி நடிகைகள் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள், இங்கு ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் வருமானத்தை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் இந்த விவகாரத்தில் அமெரிக்க காவல்துறையினருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து விசாரணைக்கு உதவி வருகிறேன்” எனவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகளை அழைத்துக் கொண்டு காரில் நீண்டதூரம் பயணம் போவதாக சொல்லிக்கொண்டு, ஆளில்லாத இடத்தில் கரை நிறுத்தி விட்டு, காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள். மேலும், ஒரு பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும், சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்தி படுத்த வேண்டும் என்றும் நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
English Summary
actress sri reddy new interview