நான் முபையில் செட்டிலாகிட்டேனா? பீதியை கிளப்பிய நடிகர் சூர்யா! - Seithipunal
Seithipunal


 
நடிகர் சூர்யா தான் நிரந்தரமாக மும்பைக்கு குடியேறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கங்குவா படத்திற்கு பிறகு, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கக்கூடிய படத்தில், நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்த நிலையில், திடீரென நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சென்னைகள் சந்தித்தார். அப்போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சூர்யா கனிவாக தனது பதிலை கொடுத்தார்.

அதில், குறிப்பாக ஒரு ரசிகர், "நீங்கள் ஏன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறினீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு நடிகர் சூர்யா, நான் நிரந்தரமாக மும்பைக்கு குடியேறவில்லை. என்னுடைய மகன் தேவ், மகள் தியா இருவரும் மும்பையில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களை பார்க்கவே நான் மும்பைக்கு சென்று வருகிறேன். நான் சென்னையில் தான் வசித்து வருகிறேன்" என்று நடிகர் சூர்யா அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

கடந்த 1 வருடமாக நடிகர் சூர்யா மும்பைக்கு நிரந்தரமாக குடியேறியதாக கூறி, ட்ரோல் செய்யப்பட்டு இருந்தார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தது தான் அதற்க்கு காரணம்.

அதில், ஹிந்தி மொழியை கட்டாயமாக்க கூடாது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை மட்டும் தான் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் சூர்யா தெரிவித்திருந்தனர்.

நடிகர் சூர்யா இப்படி அறிக்கையெல்லாம் விட்டுட்டுவிட்டு, தன்னுடைய பிள்ளைகளை மட்டும், தமிழ் தெரியாத, மராத்தியை தாய் மொழியாக கொண்ட மும்பையில் படித்து வருகிறாரே? அவருடைய பிள்ளை மட்டும் ஹிந்தியில் படிக்கலாமா?

ஏன் தமிழக அரசு பள்ளியில் அவரின் பிள்ளைகளை சேர்க்கக்கூடாதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, நடிகர் சூர்யாவை ட்ரோல் செய்திருந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூர்யாவின் இந்த பதில் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Surya Say About Mumbai Home


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->