எதிரிக்கும் நன்மை நினைத்து உதவும் மனம் கொண்டவர் ரஜினி.! எல்லாத்தையும் ஆண்டவன் பாத்துக்குவான் - ராகவா லாரன்ஸ் அதிரடி.!!
actor raghava lawrence speech about rajini
அறிமுக இயக்குனரான ஏழுமலை இயக்கத்தில் உருவான திரைப்படம் "அகவன்". இந்த படத்திற்கு தயாரிப்பாளராக ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்., தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். இந்த படத்தின் கதையானது ஆன்மீகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியீடு விழாவானது ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாக்கியராஜ்., யுகபாரதி., ராகவா லாரன்ஸ்., சின்னி ஜெயந்த்., மதுரை அன்பு செழியன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவானது ரஜினி மக்கள் மன்ற விழா போல பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில்., இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது., இந்த உலகத்தில் எனது தாய்க்கு அடுத்த படியாக பிடித்த நபர் ரஜினி சார்.
ரஜினி சாரின் ரசிகர்கள் அவர்களது குடும்பங்களை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்., ரஜினி சார் எப்போதும் ஆன்மீகத்தில் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்., அதே போன்று ரவிச்சந்திரன் ஜெயித்து காட்டியுள்ளார்.
ரஜினி சார் யாருக்கும் துரோகம் நினைத்ததும் இல்லை., செய்ததும் இல்லை. அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார் என்று கூற முடியாது. பெரும்பாலானோர் அவரை வசைபாடும் சமயத்தில்., விடு அவர்களை ஆண்டவன் பார்த்து கொள்வான் என்று கூறிவிடுவார். எதிரிக்கும் நன்மை நினைத்து உதவும் ஒரே நபர் ரஜினி சார் தான் என்று கூறினார்.
English Summary
actor raghava lawrence speech about rajini