திருமணமான 5 மணி நேரத்திலேயே புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்.! கதறியவாறு காதல்மனைவி கூறிய அதிர்ச்சி காரணம்!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா அயோவா மாகாணத்தின் வேவர்லி பகுதியில் வசித்து வந்தவர் டிரிஸ்டின் லேவ். 20 வயது நிறைந்த இவர் கடந்த ஈஸ்டர் திருநாள் அன்று தனது நீண்டநாள் தோழியிடம் முதல் முறையாக தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அதனை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டநிலையில், ஒரு வார கால இடைவெளியிலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது ஆனால் திருமணம் முடிந்த ஐந்து மணி நேரத்திலேயே, டிரிஸ்டின் துடிதுடிக்க  பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது புதுமனைவி  துடிதுடித்துப்போனார்.  

பின்னர் இது குறித்து அவர் கூறுகையில்,டிரிஸ்டின் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத்தில் பயிற்சிக்காக இணைந்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு மருத்துவரீதியாக அவர் தகுதிஇழந்ததாக கூறி அவரை அமெரிக்கராணுவம் வெளியேற்றியது.

இதைத்தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் மரணத்தின் விளிம்பில் இருந்த டிரிஸ்டினை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். 

மேலும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும்,கிடைக்காத அன்பையும் நெருக்கத்தையும் ஒரு சில மணி நேரங்களிலேயே நாங்கள் பெற்றோம்  எனவும் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youngman dead after 5 hours from getting marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->