அகதிகள் பயணம் செய்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து.. 25 பேர் பலி., 175 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


உள்நாட்டு போர் மற்றும் கடுமையான வறுமை காரணமாக வாடிவரும் ஆப்ரிக்க நாடுகளை சார்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல நாடுகளுக்கு அகதிகளாக தொடர்ந்து புலம்பெயரும் சோகம் அரங்கேறி வருகிறது. 

எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவில் மக்கள் கடல் வழியாக சட்டவிரோதமாக, ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்கள் ஏமன் நாட்டின் பாப் அல் மண்டாப் ஜலசந்தி வழியாக பயணம் செய்து அரேபியா செல்லும் நிலையில், இவர்களின் பயணம் பெரும் விபத்தில் சிக்கிவிடுகிறது. 

ஆப்ரிக்காவை சார்ந்த அகதிகள் சுமார் 200 பேர் படகு மூலமாக மேற்கூறிய பாப் அல் மண்டாப் ஜலசந்தி வழியாக பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். 

விபத்து நடந்த பல மணிநேரத்திற்கு பின்னர் அவ்வழியாக வந்த படகுகளில் பயணம் செய்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் 25 பேரின் உடலை மட்டுமே மீட்டுள்ளனர். மீதமுள்ள 175 பேரின் நிலை தெரியாததால், அவர்களை தேடி வருகின்றனர். அவர்களும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yemen to Saudi Arabia Migraters Ship Accident 25 Died 175 Missing 16 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->