7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பலி.. ஈவுஇரக்கமில்லாத கொரோனா.!
World Corona Update 5 September 2021
உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவலானது இன்று வரை உலக நாட்டு மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் விழிபிதுங்கி வரும் நிலையில், உயிர் பயம், ஊரடங்கு பயம், வருமானம் என பல கவலைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளும் மக்களின் பயன்பாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களுக்கு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தும் முனைப்புடன் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை பொறுத்த வரையில், பெரும்பாலான நாடுகள் இரண்டவது அலை தாக்கத்தாலும், சில நாடுகள் மூன்றாவது அலை தாக்கத்தின் தொடக்கத்திலும் என நாட்டின் கொரோனா பரவலை பொறுத்து வெவ்வேறு நிலைகளில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது வரை உலகம் முழுதும் 221,075,962 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,574,435 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 197,565,260 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். உலகளவில் நாளொன்றுக்கு சராசரியாக 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். 10 ஆயிரம் பேர் சராசரியாக உயிரிழக்கின்றனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் முதல் நாடாக இருந்து வரும் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 58,629 பேருக்கு கொரோனா உறுதியாகி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,765,303 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 576 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 665,858 ஆக உயர்ந்துள்ளது. 31,299,910 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்திற்கு முன்னர் வரை 32,987,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 440,567 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 20,877,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 583,362 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
World Corona Update 5 September 2021