சுற்றுலா சென்ற இடத்தில் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்! நொடியில் அரங்கேறிய சம்பவம்!!
women stuck in Avalanche
ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த விக்டர் லெய்பெங்குத் என்பவர் பனிச்சரிவில் சிக்கிய பெண் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆல்ப்ஸ் மலைச்சரிவில் அந்த பெண் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் விக்டர் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் முழுமையாக புதைந்து போயினர்.
மேலும், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பனிக்குள் புதைந்த விக்டர் மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க அவரை சுற்றியிருந்த பனி சரிவை விலக்கியுள்ளார். மேலும் ரத்தம் உறைந்த போவதைத் தடுக்க உடலுறுப்புக்களை அசைத்த வண்ணம் இருந்திருக்கிறார்.
இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் பனியை அகற்றி விக்டரைக் காப்பாற்றியுள்ளனர். பின்ன, அவர் தனது கணவர் கற்றுத் தந்த பாடமே தன்னைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.