பாய்பிரண்ட் 47 வருடங்களுக்கு முன்பு கொடுத்த மோதிரம்.! கிடைத்த நேரத்தில் கண்ணீர் கதை.!  - Seithipunal
Seithipunal


பாய்பிரண்ட் 47 வருடங்களுக்கு முன்பு கொடுத்த மோதிரம்.! கிடைத்த நேரத்தில் கண்ணீர் கதை.! 

தனது பாய்பிரண்ட் 47 ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த மோதிரத்தை கண்டுபிடித்த பெண் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இருக்கின்றார். 

இதுகுறித்து 63 வயதான மூதாட்டி ஒருவர், "கடந்த 1973-ஆம் ஆண்டு தன்னுடைய ஆண் நண்பர் கொடுத்த மோதிரம் எதிர்பாராதவிதமாக தொலைந்து விட்டது. அந்த மோதிரம் தற்பொழுது 47 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்து இருக்கின்றது. 

நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது எனது பாய்பிரண்ட் எனக்கு ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்தார். அந்த மோதிரத்தை நான் கைகழுவும்போது கழற்றி வைத்தேன். அப்பொழுது அந்த மோதிரம் தொலைந்து விட்டது. பின்னர் நான் பல இடங்களில் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.

என்னுடைய ஆண் நண்பர் ஆசையாக கொடுத்த மோதிரம் தொலைந்து விட்டாலும் கூட நாங்கள் இருவரும் பிரியாமல் காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டேன். சமீபத்தில் என்னுடைய கணவர் இறந்து விட்டார். 

இந்த நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த அந்த மோதிரம் தற்போது கிடைத்து இருக்கின்றது. காடு ஒன்றில் குழி தோண்டிக் கொண்டிருக்கையில் இந்த மோதிரம் கிடைத்துள்ளது. அந்த இடத்தில் தன்னுடைய பள்ளியின் பெயர், பட்டமளிப்பு ஆண்டுகள் என குறிப்புகள் இருக்கின்றது. இந்த மோதிரம் மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்தது, என் கணவரே வந்து சேர்ந்ததை போல இருக்கின்றது. " என்று அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women got her ring after 47 years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->