தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்!! வியக்கவைக்கும்  தகவல்!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாகவே  அடிவயிற்றில் வலி இருந்து வந்துள்ளது. இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தார், தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார்.

இந்த சூழலில் கடந்த 10 ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து ஆஸ்டின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு  ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ் தம்பதிகளுக்கு ஒரு ஆச்சரியமான அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர்கள் டேனெட் கில்ட்சை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆனதும் தெரியவந்தது.

மேலும் டேனெட் கில்ட்சுக்கு பிரசவ வலி  ஏற்பட்டது. உடனே அவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். பிரசவத்திற்க்கு பின் மற்றொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women dont know he his pregnent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->