தும்மிய காரணத்தால் விம்மிய பெண்.! 26 லட்சம் மொத்தமா போச்சு..! கொரோனா அலப்பரைகள்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் துவங்கிய கரோனா வைரஸ் உலகெங்கிலும் அழிவை ஏற்படுத்தி  வருகின்றது. எனவே, அது பரவாமல் இருக்க கடைகள், தொழிற்சாலைகள், சாலைகள், விமானங்கள், நாட்டு எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன.

இதற்கு நடுவே அத்தியாவசிய தேவைகளுக்கான மருந்து கடைகள், மளிகை கடைகள், மருத்துவமனைகளும் மட்டும் பெரும்பாலும் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன.

இதுபோல யுனைட்டட் ஸ்டேட்டஸில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் பென்சில்வேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவர் வேண்டுமென்றே சென்று இருமியதால் மளிகைக்கடையில் இருந்த இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று.

பொருட்களை வாங்க வந்த அந்தப் பெண் திடீரென இருமியதால் அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண் கொரொனா நோயாளி என்று பயப்பட உடனடியாக கடையின் உரிமையாளர் அந்தப் பெண் இருந்த இடத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்து குப்பையில் போட சொன்னார். 

இந்நிலையில் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது விளையாட்டாகத்தான் செய்ததாகக் கூற, மளிகை கடைக்காரர் உடனடியாக அந்தப் பெண்ணை போலீசில் ஒப்படைத்தார். இதன் காரணமாக அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman unwanted reaction in america


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->