தாய்மாமன் முன்னிலையில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை...!! உதவிக்கு வராத காதலன் குடும்பம்...!!
Woman Committed suicide due to love failure
காதலனுக்கு திருமணம் என கேள்விபட்டதும் இளம்பெண் அவர் வீட்டின் முன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், ராஜகொல்லஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஞானமொழி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தாய்மாமன் மகன் முரளிதரனை காதலித்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 13 வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விடுமுறைகளில் தனியே ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனால் ஞானமொழி இரு முறை கருகலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதானல் கடந்த ஓராண்டாக இருவரும் தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், முரளிதரனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஞானமொழி முரளிதரன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தன் தாய் மாமாவிடம் தனக்கு நியாயம் கேட்க அவர்கள் கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது அவர் திருமணம் செய்து வைக்கவில்லை எனில் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும் தெரிவித்தார். இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தான் கொண்டு வந்திருந்த விஷம் அருந்தியுள்ளார்.
உயிருக்கு போராடிய வரை மீட்காமல் கல்நெஞ்சத்துடன் அவர்கள் அதனை பார்த்து கொண்டிருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் கழித்து அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
முரளிதரன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஞானமொழியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து முரளிதரனின் தந்தையை கைது செய்தது காவல்துறை. மற்றவர்கள் தலைமறைவானதால் அவர்களை தேடி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Woman Committed suicide due to love failure