கண் மருந்தை கொண்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!  - Seithipunal
Seithipunal


தெற்கு கரோலினாவை சேர்ந்த 53 வயது பெண்ணின் கணவர் ஸ்டீவன் கிளேட்டன்  இவர்  மிகவும் வசதி வாய்ந்தவர் என்று தெரிகிறது. இவர் தனது மனைவியால் கொலை செய்யப்பட்டார். அதற்காக அவரது மனைவி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தனது கணவரை கொன்ற ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் என் கணவர் மிகவும் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் அவர் அவர் செய்யும் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான் அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டேன்.

அத்திட்டத்தின் படி சில திரைப்படங்களை பார்த்து ‘விசின்’ எனும் கண் சொட்டு மருந்தை 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் குடிக்கும் தண்ணீரில் கலந்து விட்டேன். அப்படி கொடுத்தால் உடல் உபாதைகள் ஏற்படும் என்று தான் நினைத்தேன்.

ஆனால் அவர் இறந்து விடுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து கொலை செய்த குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife killed her husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->