புகைப்பிடிப்பதால் கண்கள் பாதிப்படைந்து குருட்டுத்தன்மை ஏற்படும்...!! ஆராய்ச்சியில் வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
when you have smoke habit you will loss your life
இன்றுள்ள காலகட்டத்தில் நாம் நமது உடல்நலத்தை பாதுகாப்பது என்பது அவசியமாகியுள்ளது. ஏனெனில் நாம் வாழும் காலம் வரை நம்முடன் வருவது நமது உடலும் தான். அந்த வகையில்., நமது உடலை ஆரோக்கியத்துடன் பராமரிப்பது தற்போதுள்ள காலத்தில் அவசியமாகிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த புகைபிடிக்கும் பழக்கத்தினால் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் குறித்தும் உடலின் ஆரோக்கிய குறைபாடு குறித்தும் பல விதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளில் புகைப்பிடிப்பதால் நுரையீரல் மற்றும் ஈரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிப்படைவதாக ஏற்கனவே தெரியவந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாம் எச்சரிக்கையை விடுத்து வந்தாலும் ஏனோ கேட்க மனம் மறுப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில்., புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக கண்களும் பாதிப்படைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட நிலையில்., இந்த திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
ஐக்கிய நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் பல்லாயிரக்கண புகைபிடிக்கும் நபர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் புகை பிடிப்பவருக்கு கண்களில் குருட்டுத்தன்மை ஏற்படும் என்ற செய்தியானது வெளிவந்துள்ளது. மேலும்., புகையிலையில் இருக்கும் நச்சு பொருட்களின் காரணமாக இந்த பாதிப்பு கண்களில் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
when you have smoke habit you will loss your life