இந்தியாவுக்கு வெங்காயம், ஆஸ்திரேலியாவுக்கு என்ன தெரியுமா.?! என்ன கொடும சார் இது.?!
water theft in australia
3 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆஸ்திரேலியாவில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆஸ்திரேலியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சி காணப்படுகின்றது. கடும் வெயிலின் காரணமாக, பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது மேலும், தண்ணீர் பற்றாக்குறையும் அதிகரித்து வருகின்றது.
உலக வழக்கமாக, கிராக்கி அதிகமாக இருக்கும் பொருட்களை தான் நாம் விழுந்து, விழுந்து கவனிப்போம். அதன் பின்னர் களவாடப்படும். இது போல தன் அங்கே தண்ணீர் தேவை அதிகரித்து இருப்பதால், அதை திருட ஒரு கும்பல்ஆஸ்திரேலியாவில் புறப்பட்டு இருக்கின்றது.
நியூ சவுத் வேல்சின் இவான் பிளைன்ஸ் என்ற பகுதியில் மர்ம நபர்கள் டேங்க் ஒன்றிலிருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை, திருடி இருக்கின்றனர். இதை கேட்ட காவல்துறையினர் ஷாக்காகி இருக்கின்றனர். நகரில் எங்கேனும் தண்ணீர் லாரிகளோ அல்லது டிரக்குகளோ சென்றால் உடனே தெரிவிக்குமாறும் அவர்கள் பொது மக்களுக்கு அறிவித்து இருக்கின்றனர்.
மேலும், பொதுமக்கள் தங்கள் பொருட்களை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.