வெடித்து சிதறும் நிலையில் இருக்கும் எரிமலை... அச்சத்தில் மக்கள் வெளியேற்றம்..!  - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ்ஸில் வெடிக்கும் நிலையில் இருக்கின்ற எரிமலையை சுற்றி இருக்கும் பகுதியில் இருந்து, சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். 

டகாய்டாய் என்னும் நகரில் இருக்கும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் , மேலும் அதில் இருக்கும் பாறைகளும், நெருப்பு குழம்பும் பெருமளவு வெடித்து சிதறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதற்கிடையே எரிமலையிலிருந்து வெளியேறி வரும் சாம்பல் அந்த பகுதி முழுவதும் படர்ந்துள்ளது.

இதற்கிடையே, எரிமலையிலிருந்து காற்றில் பரவிய சாம்பலால் அருகே இருந்த, குதிரை பண்ணையில் வளர்க்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் பாதிக்கப்பட்டன. தற்போது அவை பத்திரமாக மீட்கப்பட்டு, ஊட்டச்சத்திற்கான அவசரகால சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Volcanic eruptions in philippines


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->