30 வருடம் கழித்து பள்ளி நட்புகளுடன் ரீயூனியன்.. 13 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


வியட்நாம் நாட்டில் உள்ள குவாங் பிங்க் மாகாணத்தில் இருக்கும் டாங் ஹூ பள்ளியில், கடந்த 1990 ஆம் வருடத்தில் பயின்ற ஒரே வகுப்பை சார்ந்த மாணவர்கள், தங்களது பள்ளியில் சந்தித்து 30 ஆவது வருடவிழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து வெவ்வேறு இடத்தில் பணியாற்றி வந்த அனைவரும் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்து, சுற்றுலா செல்ல முடிவு செய்து, அனைவரும் அங்குள்ள குவாங் மாகாணத்தில் சுற்றுலா பயணம் செய்துள்ளனர். 

இவர்களின் பேருந்து அங்குள்ள அல்ஷெட் சாலையில் உள்ள மலைப்பகுதியில் செல்கையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கு பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணம் செய்த 13 பேர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

மேலும், பலர் காயமடைந்து உயிருக்கு போராடித்துடித்த நிலையில், இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். கடந்த 30 வருடத்திற்கு முன்னதாக பள்ளியில் பயின்ற நண்பர்கள் மீண்டும் சந்தித்து, விபத்தில் 13 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vietnam Reunion school mates bus accident 13 person died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->