கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலி.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். இருப்பினும் மருத்துவத் துறையினர், சுகாதாரத்துறையினர், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் தன்னலமற்ற சேவையால் தற்போது உலகம் இந்த கொடிய கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருகிறது.

உலகம் முழுவதும் 6 கோடியே 99 ஆயிரத்து 771 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரத்து 333 பேராக  உள்ளது. 

கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14 லட்சத்து 14 ஆயிரத்து 621 பேர் பலியாகியுள்ளனர். 1 கோடியே 71 லட்சத்து 35 ஆயிரத்து 479 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 451 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் அதிகளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,046 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,39,882 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 2,68,262 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78,08,059 ஆக உள்ளது. தற்போது 50,63,561 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

usa corona update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->