உக்ரைன்: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 15 பேர் பரிதாப பலி.!
Ukraine Hospital Fire Accident 15 Patients Died
உக்ரைன் நாட்டில் இருக்கும் கார்கிவ் நகரில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்படவே, மருத்துவமனையில் மொத்தமாக சுமார் 33 பேர் மாட்டிக்கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உயிருக்காக அலறித்துடிக்கவே, தகவலை அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவமனையில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேவையான நடவடிக்கையை எடுத்தனர்.
சிலரை காயங்கள் இன்றி மீட்ட நிலையில், துரதஷ்டமாக 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மின்சாதன கருவியின் கையாளும் விதத்தில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Ukraine Hospital Fire Accident 15 Patients Died