உக்ரைன் அதிபர் சொந்த நகரின் மீது ரஷ்யப்படைகள் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடர்ந்து 7 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு உதவியாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் உதவி வருகிறது.

இப்போரில் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள் ரஷ்யா கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த நகரமான கிா்விரிஹ் நகர் பகுதியில் ரஷ்யப்படைகள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் பள்ளிகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

ஈரானிடமிருந்து பெறப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் 8 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டு ரஷ்ய ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் ஆயுத பொதுப்படை தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine counter attack on Russia drone attack on kryvyi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->