சைனாவிற்கு செவிசாய்த்தால் நிதியை நிறுத்திவிடுவேன்... பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.!!
Trump speech about WHO activity to support illegally china
அமெரிக்கா நாட்டில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வைக்க இயலாத அளவிற்கு கடும் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், சுமார் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், துவக்ககாலத்தில் கரோனாவின் தீவிரத்தை அமெரிக்கா குறைந்து மதிப்பிட்டு இருந்தது.
இந்த வைரஸின் வீரியத்தை உணர்ந்த பின்னர் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கரோனா பரவும் என்ற விஷயத்தை சீனா மறைத்துவிட்டது என்றும், சீனாவிற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் தாமதமான செயல்கள் அனைத்தும் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து உலக சுகாதார அமைப்பு ஏராளமான பணத்தை பெற்று வருகிறது. பயணம் ரீதியான தடை நான் மேற்கொண்ட சமயத்தில் என்னை விமர்சித்தனர். உடன்படவும் இல்லை. அதிக விஷயத்தில் என்னை ஏளனம் செய்தனர். சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதை இது பிரதிபலிக்கிறது. அமெரிக்கா வழங்கும் நிதியை நாங்கள் நிறுத்திவிடுவோம் என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trump speech about WHO activity to support illegally china