டிக்டாக் பிரபலத்துக்கு பாகிஸ்தானிள் நடந்த கொடூரம்...!
The woman who took tik tok has been humiliated in pakistan
உலகின் எல்லா பகுதியிலும் தினம் தினம் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலகள் கடந்து செல்லும் விஷயமாக மாறியுள்ளது .அந்த கொடூர மனப்பான்மையால் ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து 100 மேற்பட்டவர்கள் மானபங்கம் படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானிஸ்தானில் ஒரு பெண்ணை சுகந்திர தினத்தன்று பொது வெளியில் மானபங்கபடுத்திய நிகழ்வு சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. லாகூரில் உள்ள இஃபாளா பூங்காவிற்கு நண்பர்களுடன் நண்பர்களுடன் சென்ற டிக்டாக் பிரபலம் ஒருவர் அங்கு இருந்த லாகூர் ஒப்பந்த நினைவு சின்னம் முன்பு டிக்டாக் செய்துள்ளார்.
ஆனால் அங்கிருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அங்கு கூட்டம் அதிகமானதால் அந்த பெண் என்ன செய்வது என தெரியாது இருந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் திடீரென அந்த பெண்ணின் உடைகளை களைந்து மானபங்கம் படுத்தியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
The woman who took tik tok has been humiliated in pakistan