பாகிஸ்தான் எல்லையில் தற்கொலை படை தாக்குதல்..!!
Suicide bomber strikes on Pakistan border
பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான குவெட்டா புறநகர்ப்பகுதியில் பாகிஸ்தான் துணை ராணுவபடை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பகுதிக்கு உடலில் குண்டுகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் குண்டுகளை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 6 பேர் பலியாயினர் 30 மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குவெட்டாவில் ஹசாரா இனமக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து ஐஎஸ் அமைப்பின் சன்னிகுழு பல ஆண்டுகளாக தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது.
English Summary
Suicide bomber strikes on Pakistan border