பழங்குடியின மக்கள் மோதல்.. 83 பேர் பலி...!
Sudan Indigenous Peoples Fight 83 Persons Died
சூடான் நாட்டில் இருக்கும் தார்பூர் நகரில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆப்பிரிக்க யூனியனின் 13 வருட கால அமைதி திட்டம் முடிவிற்கு வந்துள்ளது. இதனையடுத்து, ஆயுத படையினரை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது.
இந்த விஷயம் நடைபெற்ற இரண்டு வாரத்திற்குள்ளாகவே, அந்நாட்டில் பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட தொடங்கியுள்ளது. அங்குள்ள அல் ஜெனீனா நகரில் உள்ள மசாலித் பழங்குடியின குழுவிற்கும், அராஃப் பழங்குடியின குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் வீடுகள் சூறையாடப்பட்ட நிலையில், மொத்தமாக 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு சார்பில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் உட்பட 160 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Sudan Indigenous Peoples Fight 83 Persons Died