இந்தோனேசியா : 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 6:30 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆச்சே மாகாணத்தில் உள்ள சிங்கில் நகருக்கு தென்கிழக்கே 48 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவிலும், பூமிக்கு அடியில் 48 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த நவம்பர் 21 அன்று இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேற்கு ஜாவாஜாவாவின் பிரதான தீவில் உள்ள மாகாணத்தில் 602 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Strong earthquake hits Indonesia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->