இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!!
Strong Earthquake again in Indonesia
இந்தோனேசியாவின் சுமித்ரா தீவு கடற் பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.16) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளம் நேரப்படி அதிகாலை 6:30 மணி அளவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்திருந்தது. எனினும் சுனாமியை எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுலாவேதி பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது..கொரண்டலோவின் தென்கிழக்கு கடலுக்கு அடியில் 91 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியா மக்கள் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் அச்சமடைந்துள்ளனர்.
English Summary
Strong Earthquake again in Indonesia