நடுக்கடலில் தத்தளித்த 6 இலங்கை மீனவர்கள்.. உதவிக்கரம் நீட்டிய இந்திய கடற்படை..!!
Srilankan Fisherman rescued by Indian Navy force
ஸ்ரீலங்கா நாட்டினை சார்ந்த 6 மீனவர்கள் சென்னையில் இருந்து 170 நாட்டிகள் மையில் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். இந்த சூழ்நிலையில், இவர்களின் படகு திடீரென விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் படகு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கவே, மீனவர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். இந்த சமயத்தில், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இந்திய கடற்படை அதிகாரிகள் மீனவர்கள் உயிருக்கு போராடுவதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை காக்கும் பொருட்டு விரைந்து சென்ற அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆனால் தமிழக மீனவர்களுக்கு இரக்கம் என்பதை காண்பிக்காத இலங்கை கடற்படை அதிகாரிகள் இதனை புரிந்து செயல்பட வேண்டும் என்று இணையத்தளத்தில் கோரிக்கை எழுந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Srilankan Fisherman rescued by Indian Navy force