தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க திட்டமிட்டுள்ள இலங்கை?..! நீதிமன்றத்தின் உத்தரவால் அதிர்ச்சி.!
Srilanka Court Order Tamilnadu Fishermen arrest bots to Destroy
தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது. இது மட்டுமல்லாது அங்குள்ள இலங்கை மீனவர்களும் அராஜகம் செய்து வரும் நிலையில், மீன்களை மீண்டும் கடலில் போட்டு, வலைகளை கிழித்து தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்து அங்குள்ள சிறைகளில் அடிப்பதும் என கொடுமைப்படுத்தி வரும் நிலையில், அவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் அங்குள்ள கடற்கரை பகுதிகளில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.
இந்த படகுகளை துவக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த 2015 ஆம் வருடம் முதல் 2018 ஆம் வருடம் வரை இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ள 121 படகுகளில் 94 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 94 படகுகளில் 88 படகுகள் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Srilanka Court Order Tamilnadu Fishermen arrest bots to Destroy