தினம் சாப்பாடு போட்டவரை பிணமாக பார்த்த குரங்கு செய்த செயல்.! கண்ணீர் தரும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. 

சமூக வலைதளங்கள் மூலம் அனைத்துமே கண்காணிப்பில் இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. நமது வாழ்வில் நடக்கும் அனைத்து உணர்வுகளையும், நிகழ்வுகளையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிக்கொண்டு வருகிறோம். 

அத்துடன் எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளும் நமக்கு கிடைக்கிறது. இத்தகைய சூழலில், ஒரு குரங்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக மனிதர்களை விட நாய், பூனை, குரங்கு போன்ற பல விலங்குகளும் மிக அன்பானவை தான் என்று ஏற்கனவே நம் அறிந்திருப்போம். அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் இலங்கையில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் ஒருவர் குரங்குக்கு அன்றாடம் உணவு கொடுத்துக் கொண்டே இருப்பார். 

அவர் திடீரென உயிரிழந்த விட அவரது இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத அந்த குரங்கு அவரது உடலுக்கு அருகில் வந்து நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த குரங்கு அஞ்சலி செலுத்தும் காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan money make cry all peoples in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->