ஸ்பெயின் இளவரசி கரோனாவால் இயற்கையை எய்தினார்..! - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா இயற்கையை எய்தினார். 

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இத்னால் மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெயின் நாடு மற்றும் இத்தாலி நாடுகள் பெரும் தாக்கத்தை சந்தித்துள்ளது. 

அந்நாட்டு மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில், ஸ்பெயின் நாட்டின் இளவரசியான மரியா தெரசா கரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். 

இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 28 ஆம் தேதி 1933 ஆம் பிறந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார். ஸ்பெயின் நாட்டு அரச குடும்பத்தின் முதல் பலியாக இது இருக்கிறது.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

spain princess maria theresa died corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->