இரவு நேர விடுதியால் மீண்டும் சிக்கலில் சிக்கிய தென்கொரியா..!!
south korea corona virus return by night club
உலகமே காரோனா வைரஸின் காரணமாக சிக்கி சின்னாபின்னமாகியுள்ள நிலையில், தென்கொரியா துவக்கத்தில் இருந்த கரோனா வைரஸை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், புதிதாக 94 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தற்போது தென்கொரியா சமூக இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் தென்கொரியாவில் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பல அதிரடி நடவடிக்கையால் கரோனா கட்டுக்குள் இருந்த நிலையில், இரவு நேரத்தில் செயல்படும் கேளிக்கை விடுதிகளில் பாலுறவை தவிர்த்து, ஓரினசேர்க்கை போன்றவையும் நடைபெற்று வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா பரவியுள்ளது. இதனை கண்டறிவதும் சிக்கலாக அமைந்துள்ளது. மேலும், விடுதிக்கு வரும் நபர்கள் போலியான முகவரியை வழங்கியுள்ளதால், நபரை அடையாளம் காணும் பணியும் தொய்வை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
south korea corona virus return by night club