தம்பதிகளே தயாராகுங்கள்... 3 குழந்தை பெற்றெடுத்தால், ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் நிதிஉதவி..!
South Korea Announce 3 Children Parents Loan and Price
தென்கொரியா நாட்டில் உள்ள தெற்கு கியெவ்ங்சாங் மாகாணத்தின் சாங்வான் நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனை ஈடு செய்ய திருமணமான தம்பதிகளுக்கு, அந்நாட்டு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு இலட்சம் அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் ரூ.73,33,025) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 92 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக கடன் பெரும் தம்பதிகள் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் சமயத்தில் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும், இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ளும் சமயத்தில் கடன் தொகையில் 30 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்றும், மூன்றாவது குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் முழு தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
South Korea Announce 3 Children Parents Loan and Price