தோழிகளுடன் சத்தமாக கடலை போட்ட நபர்.. 5 ஆண்களை வெறித்தனமாக போட்டுத்தள்ளிய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கிறது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

மேலும், ரஷிய நாட்டிலும் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மஸ்கொ நகரில் இருந்து தென்கிழக்கு பகுதியில் அமைத்துள்ள ரியாசன் பிராந்திய பகுதியில் அமைந்துள்ள எல்டமா கிராமத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

எல்டமா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில், அங்குள்ள இல்லத்தின் ஜன்னலுக்கு வெளியே சில இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கூட்டமாக இருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் சத்தமாக பேசிக்கொண்டு இருந்த நிலையில், 31 வயது நபர் அவர்களை அங்கிருந்து செல்ல கூறியுள்ளார். 

இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளான 31 வயது நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அனைவரையும் சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார். இந்த துப்பாக்கிசூட்டில் 4 ஆண்கள் உட்பட பெண் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia man murder 5 persons


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->