ஆராய்ச்சிக்காக மலைப்பாம்பிடம் கடி வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி!! - Seithipunal
Seithipunal


மலைப்பாம்பு கடித்தால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக இளைஞர் ஒருவர் பாம்பை கடிக்க வைத்து அதை வீடியோவாக வெளியிட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஆடம் தோரன். ஹிஸ்டரி சேனலில் நடக்க உள்ள நிகழ்ச்சி ஒன்றுக்காக இவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அதன்படி மலைப்பாம்பு கடித்தால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை குறித்தும், அதனால் ஏற்படும் வலி மற்றும் மாற்றங்கள் பற்றியும் ஆய்வு நடத்துவது போன்ற நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இதற்காக 6 அடி நீளம் கொண்ட பர்மிய மலைப்பாம்பு கொண்டு வரப்பட்டது, அதன் முன் தனது முழங்கையைக் காட்டினார் ஆடம்.

அடுத்த நொடியே ஆக்ரோஷமான மலைப்பாம்பு ஆடமின் கையைப் பதம் பார்த்தது. இறுதியில் சோதனை முயற்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து வலியால் துடித்த அவரின் காயத்திற்கு தையல் போடப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pythons bites for project


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->