இலங்கை தேவாலயத்தில் குண்டுவெடிப்பிற்கு சில நிமிடங்களுக்கு முன்பு... வெளியான நெஞ்சை பிளக்கும் புகைப்படங்கள்!! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும்  சிறப்பு பிராத்தனை நடைபெற்றபோது திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

அதில் இதுவரை மொத்தம் 290 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர்.

இத்தகைய குண்டுவெடிப்பிற்கு ஒரு மணிநேரங்களுக்கு முன்பு, சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை அன்று இறைவன் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும்விதமாக சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடி பாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இது பார்ப்போரை நெஞ்சம் உருகவைக்கும் வகையில் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

photos before bompblast in srilanka church


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->