வருடத்திற்கு 4 செமீ அளவில் கடலில் மூழ்கும் கிராமம்.. எச்சரிக்கை விடுக்கும் ஆர்வலர்கள்.!!
Philippines village submerge water due to increasing sea water level
பிலிப்பைன்ஸ் நாட்டுடைய தலைநகர் மணிலாவில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிடியோ பரிஹாந் கிராமமானது தீவாக இருந்த கிராமமாக இருந்து வந்தது. இந்த நிலையில்., தற்போது நிலப்பரப்பு இல்லாத கடலில் மிதக்கும் கிராமமாக இக்கிராமம் மாறியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பல வருடங்களாக அதிகரித்த மனித செயல்பாடுகளின் காரணமாக ஏற்பட்ட புவி வெப்பமயமாதல் பிரச்சனையின் அடிப்படையில் கடல்நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்., சிடியோ பரிஹாந் கிராமம் மெல்லமெல்ல கடலில் மூழ்கிகொண்டு வருகிறது.
தற்போது வெளியான ஆய்வறிக்கையின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 4 செ.மீ அளவில் இக்கிராமம் கடலில் மூழ்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில்., கிராமத்திற்கு தேவையான மின்சார சக்தியை சூரிய மின்சாரம் தந்து வருகிறது.
இங்கிருக்கும் கிணற்றின் மூலமாக கிராமத்தின் நீர் தேவை தீர்ந்து வந்த நிலையில்., கிணற்றில் இருக்கும் நீரின் மூலமாக மக்கள் தங்களின் தேவையை நிவர்த்தி செய்து வந்தனர்.
கிராமத்தில் இருந்த நீதிமன்றம் மற்றும் தேவாலயம் கடந்த 2011 ஆம் வருடத்தின் போது ஏற்பட்ட புயலில் சிக்கி அழிந்த நிலையில்., இக்கிராமத்தில் வாழும் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளதால்., வேறு எங்கும் செல்ல இயலாது கிராமத்திலேயே வசித்து வருகின்றனர்.
செல்ல வேறெங்கும் இடமில்லாததால் தங்களின் இல்லங்களின் உயரத்தை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றனர். கடல்நீர் மட்டும் உயரம் கூடத்துவங்கும் நேரத்தில் மூங்கில்களின் மூலமாக உயரத்தை அதிகரித்து வருகின்றனர். மேலும்., இந்த கிராமம் கட்டாயம் விரைவில் கடலில் மூழ்கும் என்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Philippines village submerge water due to increasing sea water level