பிலிப்பைன்ஸில் அதிபயங்கர நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்.!
Philippians Earthquake 21 Jan 2021
உலகம் முழுவதும் நிலநடுக்கம் தொடர்பான அச்சம் மீண்டும் மக்களிடையே அதிகளவு ஏற்பட தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 77 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போன்டாகைன் நகரில் இருந்து, தென்கிழக்கு பகுதியில் 219 கிமீ தூரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், பிலிப்பைன்ஸ் நாட்டின் வணிக நகராக கருதப்படும் தவயோ நகரிலும் உணரப்பட்டு இருக்கிறது. இங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீட்டினை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் குறித்த சேத விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
Tamil online news Today News in Tamil
English Summary
Philippians Earthquake 21 Jan 2021