பிலிப்பைன்ஸில் அதிபயங்கர நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் நிலநடுக்கம் தொடர்பான அச்சம் மீண்டும் மக்களிடையே அதிகளவு ஏற்பட தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 77 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள போன்டாகைன் நகரில் இருந்து, தென்கிழக்கு பகுதியில் 219 கிமீ தூரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம், பிலிப்பைன்ஸ் நாட்டின் வணிக நகராக கருதப்படும் தவயோ நகரிலும் உணரப்பட்டு இருக்கிறது. இங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீட்டினை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் குறித்த சேத விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Philippians Earthquake 21 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->