2 வயதில் கடத்தப்பட்ட மகளை 51 வருடங்களுக்குப் பிறகு மீட்ட பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 1971 ஆம் ஆண்டு மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் 2 வயது குழந்தையை பராமரித்துக் கொள்வதற்காக பணியாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.

இந்த நிலையில் பெற்றோர்கள் ஒரு நாள் குழந்தையை பராமரிப்பாளரிடம் விட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளனர். அப்போது திரும்பி வந்து பார்த்தபோது பராமரிப்பாளர் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் மிகுந்த மன கவலையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 51 வருடங்களுக்கு பிறகு தங்களின் மகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிறு வயது அடையாளங்கள் மற்றும் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டனர். அதில் அனைத்தும் ஒத்துபோனதால் தங்களது மகள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் கட்டி தழுவி ஆனந்த கண்ணீரில் திலைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents rescue daughter who was kidnapped at the age of 2 after 51 years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->