படுக்கையறையில் சிறுவன் செய்த காரியம், அடித்தே கொன்ற பெற்றோர்.!
parents killed boy
அமெரிக்காவில் இருக்கும் இல்லினாய்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ப்ரூயண்ட்- ஜோயன் குன்னிங்கம் என்ற தம்பதிகளுக்கு ஏஜே ப்ரூயண்ட் என்ற 5 வயது மகன் இருக்கின்றான். கடந்த மே மாதத்தில் ஏஜே அவனது படுக்கையறையிலேயே சிறுநீர் கழித்து இருக்கின்ரான்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஜோயன் சிறுவனை பலமாக தாக்கி இருக்கின்றார், பின்னர் தன் மனைவி வீட்டிற்கு வந்ததும் அவரிடம் இது குறித்து கூற அவரும் சேர்ந்து பலமாக அடித்துள்ளார். இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உடனே உயிரிழந்துள்ளான்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து இருக்கின்றனர். பின்னர் இது காவல் துறைக்கு தெரிய வந்து தற்போது குற்றம் நிரூபிக்க பட்டுள்ளது.
கொலை செய்த தாய்க்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் தண்டனை வழங்கப்பட உள்ளது. சிறுவனின் தந்தை ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.