பெற்றோர், உடன்பிறந்தோரை உயிருடன் தீவைத்து கொளுத்திய கொடூரன்.!!
Pakistan youngster murder her parents and brother sisters
பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள தசகா நகர் முகமதுபுரா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தின் போது மூன்று சகோதர சகோதரிகள் மற்றும் பெற்றோரை போதையில் இளைஞர் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்த குற்றவழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் தற்போது கைது செய்தனர்.
பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் என அனைவரையும் கொடூர கொலை செய்த அலி ஹம்சா (வயது 25). இவருக்கு போதை பழக்கம் மற்றும் பல கீழ்த்தரமான பழக்கங்கள் இருந்த நிலையில், குடும்பத்தினருடன் எந்த சமயத்திலும் சண்டையிட்டு வந்துள்ளார்.
தீவிபத்தில் குடும்பத்தினர் இறந்தது போல தோற்றத்தை ஏற்படுத்தி தப்பிக்க நினைத்ததும், சம்பவத்தன்று அலி ஹம்சாவின் தந்தை முகமது அஷ்ரப் மற்றும் தாய் யாஸ்மீன் பீபி சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியான நிலையில், சகோதரி சோபியா, பவுசியா, சகோதரர் ஹைதர் ஆகியோர் மருத்துவமனையில் சில நாட்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Tamil online news Today News in Tamil
English Summary
Pakistan youngster murder her parents and brother sisters