மத போதகரின் கொடூரம்... கண்ணீருடன் கதறிய சிறுமி.. வெளியான பரபரப்பு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் மதரஸா பகுதியில் குழந்தைகள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகளுக்கு குரான் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார். இதற்காக ஆசிரியரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த பள்ளியில் இருக்கும் மதபோதகர், ஒரு பச்சிளம் குழந்தையை ரப்பர் குழாயினை கொண்டு அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், சிறுமி அடிக்க வேண்டாம்.. வலிக்கிறது என்று கண்ணீரில் கதறியும், ஆசிரியர் விடவில்லை. 

தொடர்ந்து ஆசிரியர் சிறுமியை அடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், குரானை கற்றுக்கொண்டு இருக்கும் பிற பெண்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 

இதனையடுத்து அம்மாகாண காவல் துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பள்ளியில் மத போதகர்களாக இருந்து வந்த முகம்மது பரீத் மற்றும் அலி செயிட் என்ற இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan School Religious pastor attack child


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->