பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து.. 7 பேர் பலி., 28 பேர் படுகாயம்.!
Pakistan Punjab Bus Accident 7 Died 35 Injured
பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின், கிழக்கு சக்வால் மாவட்டத்தில் இருந்து கராச்சி நகர் நோக்கி நேற்று இரவு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில், 35 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பேருந்து, பஞ்சாப் மாகாணத்தின் கான்வால் மாவட்டத்தில் இருக்கும் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருக்கையில், பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்துள்ளது.
மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 28 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pakistan Punjab Bus Accident 7 Died 35 Injured