நாங்கள் இந்தியாவுடன் சேர விரும்புகிறோம்., பாகிஸ்தானிலிருந்து மோடிக்கு வந்த கோரிக்கை! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!
pakistan people request modi
பாகிஸ்தானிமிருந்து சிந்து மாகாணம் மக்களுக்கு விடுதலை பெற உதவுமாறு, அமெரிக்காவில் வாழ்ந்து சிந்தி சமூக மக்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி என்ற பிரம்மாண்டமான நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் பங்கேற்கம் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானிலிருந்து வந்து அமெரிக்காவில் வசித்து வரும் சிந்தி சமூக மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிந்தி சமூக மக்கள் மீது நடத்தி வரும் அட்டூழியங்களில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்கா டிரம்பும் உதவுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிமிருந்து வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது போலவே , சிந்தி சமூக மக்களுக்கும் விடுதலை பெறுவதற்கு இந்தியாவின் உதவி தேவை என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
English Summary
pakistan people request modi