பாக். விமான விபத்து.. கொரோனா குறித்து பேசி, கோட்டை விட்ட விமானிகள்.!! - Seithipunal
Seithipunal


பாக்கிஸ்தான் நாட்டின் லாகூரில் இருந்து கராச்சி நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் கடந்த மே 22 ஆம் தேதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 91 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 100 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மட்டும் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விபத்திற்குள்ளான விமானம் தொடர்பான விசாரணை நிறைவுபெற்ற நிலையில், விமானிகளின் இறுதிக்கட்ட உரையாடல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த உரையாடல்களில் விமானிகள் இருவரும் கொரோனா வைரஸ் குறித்து பேசி அலட்சியத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், விமானம் தரையிறங்கும் நேரத்தில், தரையிறங்குவது குறித்து கவனம் இல்லாமல் கொரோனா தொடர்பாக பேசிக்கொண்டு இருந்த சூழலில், கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் கொடுத்த அறிவிப்புகளை சரிவர கவனிக்காமல் இருந்த காரணத்தால் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Flight Crash Pilot Discuss about Corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->