பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி.! 20 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கோஹ்லு மாவட்டத்திலுள்ள பரபரப்பான சந்தையில் அமைந்துள்ள இனிப்பு கடையில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person killed in Bomb blast in Pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->